Jump to content

User:Ru Abinaya

From Wikipedia, the free encyclopedia
                              புவியின் வரலாறு
                              
                              
             புவியின் வரலாறு என்பது புவி என்ற கோளின் அடிப்படை வளர்ச்சி நிலைகளைப் பற்றியும் ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை தோன்றிய விதம்பற்றியும் குறிப்பதாகும். இயற்கை விஞ்ஞானத்தின் எல்லா துறைகளும் புவியினைப் பற்றி படிப்பதற்கு உதவுகின்றன. இந்த அண்டத்தின் ஆயுளில் மூன்றில் ஒரு பங்கான, 4.54 பில்லியன் ஆண்டுகள் புவியின் ஆயுளாகும். புவியின் மாற்றத்திற்கேற்ப உயிரியல் மற்றும் நிலவியல் துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சூரிய ஒண்மீன் படலத்திலிருந்து பிரிந்து அடர்வளர்ச்சியின் பயனாக உருவானது. தொடக்கத்தி எரிமலை வாயுவால் காற்றுமண்டலம் உருவானது, ஆனால் அதில் உயிர்வாழத்தேவையான பிராணவாயு இல்லாமல் நச்சு வாயுக்களைக் கொண்டதாகயிருந்தது. பெரும் எரிமலைச் சிதறலாலும், பிற அண்டவெளிப் பொருளில் மோதிக்கொண்டேயிருந்ததாலும் புவியின் பெரும்பகுதி உருகிய நிலையிலேயே உள்ளது. அத்தகைய மோதல்களின் விளைவால்தான் சந்திரன் உருவானதாகவும், புவி சற்று சாய்ந்த நிலையில் மாறியதாகவும் கருதப்படுகிறது. பல காலங்கள் புவி குளிர்ச்சியடைந்து திடநிலையானது. புவியில் மோதிய வால்வெள்ளிகள் மற்றும் சிறுகோள்கள் மூலமாக மேகங்கள் உருவாகி பெருங்கடல்கள் உருவாகின. அதன்பின்னரே உயிர்கள் வாழ தகுந்த சூழல் உருவானது அடுத்து பிராணவாயுவும் அதிகரிக்கத் தொடங்கியது. வெறும் நுண்ணுயிர்கள் மற்றும் மிகச்சிறிய உயிர்கள் மட்டும் ஒரு பில்லியன் ஆண்டுகள் வரை புவியில் இருந்துள்ளன. 580 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பலசெல் உயிரினங்கள் தோன்றி கேம்பிரியக் காலத்தில் முக்கிய பெருந்தொகுதிகள் பரிணாமித்தன. 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தான் மனிதயினத்தின் நெருங்கிய சிம்பன்சிகள் தோன்றின அதிலிருந்து மனிதக் கூர்ப்புகள் பிரிந்து தற்கால நவீன மனிதர்கள் உருவானார்கள்.

தோன்றிய காலம் தொட்டே நமது கோளில் உயிரியல் மற்றும் நிலவியல் மாற்றங்கள் நடந்தவண்ணமே உள்ளது. உயிரினங்கள் படிவளர்ச்சிக் கொள்கைப்படி புதிதுபுதிதாக உருவாகிக்கொண்டே மாற்றத்தை நிகழ்த்துகிறன. புவின் தற்போதைய கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களின் வடிவத்திற்கு முக்கிய காரணம் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு ஆகும். கமழிப் படலத் தோற்றமும், பிராணவாயு பெருக்கமும், மண் உருவாக்கமும் செய்து உயிரற்ற நிலையையும் காற்றுவெளியின் கணிசமான மாற்றத்தையும் கொண்டுவந்தது உயிர்க்கோளம் ஆகும்.